தேவனை எல்லாக் காரியங்களிலும் நம்புதல்

ஒரு முறை ஒரு அதிகாரி வேத ஆராய்ச்சியில் கலந்து கொண்டார். அந்த ஆராய்ச்சியின் இறுதியில் ‘உனக்காக மரித்த உன் இரட்சகரை நீ நம்பலாம்” என்று அந்த வேத ஆராய்ச்சியை நடத்திய தலைவர் கூறினார். ஆழமாகத் தொடப்பட்டவராய் அந்த அதிகாரி அந்தக் கூடுகையை விட்டுச் சென்றார். அவர் வீட்டிற்குச் செல்லும்போது ‘உனக்காக மரித்த உன் இரட்சகரை நம்பலாம்” என்ற சொற்கள் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்தன.