துயரங்களின் மத்தியில் தேவனையும் அவருடைய வார்த்தையையும் நம்புதல்

ஸ்காட் வாக்கர் ‘வாழ்க்கை கைப்பிடி சுவர்கள்” (life-rails) என்ற தனது புத்தகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் தனது பெற்றோருடன் இருந்தபோது தனது வாழ்வில் நடந்த சம்பவத்தைப் பற்றி எழுதியுள்ளார். அவரது தகப்பனார் பிலிப்பைன்ஸில் இருந்த ஒரு பாப்டிஸ்டு கல்லூரியில் மிஷனரி ஆசிரிய ராகப் பணி செய்து வந்தார். 1965ஆம் ஆண்டில் ஸ்காட் வாக்கர் 14 வயது சிறுவனாக இருந்தபோது அந்த மிஷனரி குடும்பத்தைத் துயரம் தாக்கியது.