செல்வத்தைக் குறித்து சரியான மனப்பான்மை

By C Barnabas
ரிச்சர்ட் டி ஹன்(Richard W. De Haan) செல்வத்தைக் குறித்து தவறான மனப் பான்மை கொண்ட டெக்சாஸில் வாழ்ந்த ஒரு செல்வந்தனைக் குறித்து ஒரு முறை எழுதினார். தனது பணத்தை நிலங்களி லும், பண்ணைகளிலும் முதலீடு செய்த ஒரு செல்வந்தனின் வீட்டிற்கு ஒரு போதகர் சென்றார். அந்த செல்வந்தன் போதகரை மகிழ்ச்சியுடன் வரவேற்று, வீட்டைச் சுற்றிக் காண்பித்தார். அந்த வீட்டின் உச்சிக்கு சென்ற போது போதகரை நோக்கி செல் வந்தர், ~இருபத்தைந்து வருடத்திற்கு முன் என்னிடம் ஒன்றுமே இல்லை. இப்பொழுது எதுவரை நீங்கள் பார்க்க முடிகிறதோ அவை எல்லாம் என்னுடையவைகள்| என்று கூறினார். ஒரு பக்கம் தானிய வயல்கள் இருந்தன. அந்த பக்கம் திரும்பிய செல்வந்தர் செருக்குடன், ~இந்த தானிய வயல்கள் எல்லாம் என்னுடையவை| என்றார். பின்னர் மேற்கு திசையை நோக்கியவாறு, ~இந்த அழகான காடுகள் என்னுடையவை| என்று பெருமிதத்தோடு கூறினார். தனது உடைமைகளைக் குறித்து தற்பெருமை கொண்ட செல்வந்தன் போதகர் தன்னுடைய வெற்றிகொண்ட செல்வாக்கு களைப் பாராட்டுவார் என்ற எதிர்பார்ப்புடன் அவரை நோக்கினார். ஆனால் அந்த போத கர் தன் கையை அந்த செல்வந்தனின் தோளில் வைத்தவாறு பரலோகத்தை நோக்கிக் காண்பித்து ~பரலோகத்தில் எவ்வளவு சேர்த்து வைத்துள்ளீர்?| என்று வினவினார். அந்த மனிதன் தன் தலையைத் தாழ்த்திய வண்ணம், ~நான் அதைக் குறித்து யோசித்ததே இல்லை| என்று அறிக்கையிட்டான். ஏராளமான சொத்துக்களைச் சேர்ப் பதும், இந்த உலகத்தில் சேர்த்து வைப்பதும் தான் வாழ்க்கை என்று அந்த செல்வந்தன் எண்ணினான். இன்றும் அநேக கிறிஸ்தவர்கள் இந்த செல்வந்தனைப் போல வாழ்கின்றனர். அவர்கள் பணக்காரர்களாக விரும்பி, செல்வத்தைக் குறித்து தவறான மனப்பான்மை உடையவர்களாக வாழ்கின்றனர். செல்வத்தைக் குறித்தும், பணத்தின் மேல் சரியான மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும் என வேதாகமம் தெளிவாக அறிவுறுத்துகிறது.
1.செல்வத்தை ஒருபோதும் நம்பாதே:


a.அது நிலையற்றது:
~இவ்வுலகத்திலே ஐசு வரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தை யுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மை களையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக் கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்..| (1தீமோ 6:17)

b. அது ஒருவனையும் விடுவிக்காது: ~
தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசு வரியத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணா மல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும் படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக் கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும் பொரு ளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே| (சங் 49:6-8).


c.அது மற்றவர்களின் இகழ்ச்சிக்கு வழி வகுக்கும்:
~
நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து: இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்| (சங் 52:6,7).


2.இருதயத்தை செல்வத்தின் மீது வைக்காதே:~
ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்| (சங் 62:10).

3.செல்வம் என்றென்றும் நிலைக்காது: ~
பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்| (மத் 6:19).

4.அழிவுக்கு நேராக நடத்தும் பண ஆசையை விட்டு ஓடு: ~
நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத் தையும் அடையும்படி நாடு| (1தீமோ 6:11).

5.மேலானவைகளை நாடு: ~
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்|(கொலோ 3:1,2).

6.பொருளாசை விக்கிரகாராதனை:~
ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங் களை அழித்துப்போடுங்கள்| (கொலோ 3:5).

7.பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்:~
பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை| (மத் 6:20)

8.செல்வம் சஞ்சலத்தைத் தரும்:~
சஞ்சலத் தோடு கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ் சப்பொருளே உத்தமம்| (நீதி 15:16).

9.செல்வம் நிலையற்றது, தற்காலிகமானது:
‘ஐசவரியவானாக வேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டு பண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்| (நீதி 23:4,5).


10.இருக்கிறவைகள் போதும் என்று எண்ண வேண்டும்:~
நீங்கள் பண ஆசையில்லா தவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே| (எபி 13:5).

11.செல்வத்திற்கு முதலிடம் கொடுக்காதே: ~
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங் கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்|(மத் 6:33).

12.உண்மையோடு பணத்தை கையாள வேண்டும்:~
வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக் கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்| (2இராஜா 12:15).



(Translated from True Discipleship July 1997)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment